மு.க.ஸ்டாலினால் ஈர்க்கப்பட்டு திமுக-வில் இணைந்த கோவை வாழ் வடமாநிலத்தவர்கள்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளினால் எந்த அரசு தங்களை ஆட்சி செய்கிறது என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். இதற்கு காரணம் அதிமுக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசாலே ஆகும். தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலிலும், அதுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் விதமாக திமுக-வும் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றன.

அதிமுகவின் நிலையற்ற ஆட்சியினைத் தொடர்ந்து, திமுக புதிய மேம்பாட்டுச் செயல்களை மேற்கொண்டு வரும் நிலையில் அக்கட்சியில் உறுப்பினர்களாக சேர்வோர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.



அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பில் உள்ள மு.க.ஸ்டாலின் செயல்களால் ஈர்க்கப்பட்ட  கோவையில் வாழ்ந்து வரும் வட மாநில மொழி பேசும் சிந்தி, குஜராத்தி, ஜெயின் பஞ்சாபி, மார்வாடி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் நாச்சிமுத்து, கார்த்திக் செல்வராஜ், நா.முருகவேல், ராஜேந்திர பிரபு மற்றும் மு.க.ஸ்டாலின் இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...