வால்பாறை தேயிலை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.450 கூலி வழங்க வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்


வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக நாளொன்றுக்கு ரூ.450 வீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பாக வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கேரளாவில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாயிக்கும் மேல் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவாகவே வழங்கப்படுகிறது. 



எனவே, அரசுக்கும், தேயிலை தோட்ட நிர்வாகத்தினரும் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலார்களுக்கு நாளொன்றுக்கு 450 ரூபாய் வீதம் வழங்க வேண்டும்' என்று உரையாற்றினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கௌரவ தலைவர் கோவிந்தராஜன், பொதுச்செயலாளர் மோகன், துணைத்தலைவர்கள் மாணிக்கம், சின்னப்பன், ஜீவனந்தம், பாலகிருஷ்ணன், அண்ணாதுரை ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம், ஆனைமலையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வால்பாறை காவல் நிலையத்தில் ஏஐடியுசி, பாஜக-வினர் புகார்

வால்பாறை ஏஐடியுசி-வினர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் பேசுகையில் அத்துமீறி கூட்டத்தில் நுழைந்த பாஜக-வினர் மைக்குகளை பிடுங்கி உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐஎம் மற்றும் ஏஐடியுசி-வினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டக் கூட்டத்தின் போது பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தனது உரையில், பிரதமர் மோடியை தவறாக பேசியதாக வால்பாறை பாஜக மண்டல பொதுச்செயலாளர் கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை தேச விரோதிகள் என்று மிகவும் கீழ் தரமாக பேசிய சிபிஐஎம் வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...