உதகையை தூய்மைபடுத்திய காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து தூய்மை பாரதம் என்ற இலக்கை அடையும் வகையில் தூய்மை பணிகளை மேற்கொண்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் 

துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் மணிகண்டன், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த தூய்மை பணியின் போது, தாவிரவியல் பூங்கா சாலை, என்.சி.எம்.எஸ் பகுதி, கோத்தகிரி, குன்னூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பி.1, ஜி1, புது மந்து, மஞ்சூர் உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் 200 பேரும், 100 நகராட்சி பணியாளர்களும் பங்கேற்றனர். மேலும், 10 நகராட்சி வாகனங்களும் இப்பணிக்கு ஈடுபடுத்தப்பட்டன.



நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உதகையின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து நடத்திய இந்த தூய்மை பணி மக்களிடமும் சுற்றுலா பயணிகளிடமும் பெரும் வரவேற்பை  பெற்றது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...