கோவையில் கஞ்சா குற்றவாளிகள் இரண்டு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் மற்றும் இளையராஜா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Coimbatore:கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (44) மற்றும் இளையராஜா (47) ஆகியோரை கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக செல்வம் மற்றும் இளையராஜா ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். 

அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளான செல்வம் மற்றும் இளையராஜா ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இன்று ஜூலை.3 அடைக்கப்பட்டனர். 

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். 

மேலும் இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 37 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...