கோவை - மேட்டுப்பாளையம் இரட்டை இருப்புப் பாதைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

கோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அமைச்சர் எல்.முருகன் இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார். இந்த திட்டம் பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்லும்.


Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் கோவை இரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார்.

மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், நீண்டகாலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஜூலை 4 அன்று இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மனு வழங்கினார்.

இந்த இரட்டை இருப்புப் பாதை திட்டம் பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான பயண நேரம் குறைவதோடு, அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...