உடுமலையில் நகர மன்ற கூட்டம்: குப்பை அகற்றும் பணி மற்றும் மதுபான கடை இடமாற்றம் குறித்து விவாதம்

உடுமலை நகர மன்ற கூட்டத்தில் குப்பை அகற்றும் பணி மற்றும் மதுபான கடை இடமாற்றம் குறித்து விவாதம் நடைபெற்றது. 75 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் இன்று நடைபெற்றது. 

கூட்டத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர் சௌந்தர்ராஜன் பேசும் பொழுது, உடுமலை நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் குப்பைகள் அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். அலட்சியம் காட்டும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும், 25 வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பேசுகையில், உடுமலை தளி ரோட்டில் மத்திய கூட்டுறவு வங்கி அர்பன் பேங்க் எதிரில் உள்ள அரசு மதுபான கடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும், இவற்றை இடமாற்றம் செய்வதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும், தற்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மீண்டும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், நகர மன்ற உறுப்பினர்கள் வழங்கும் கோரிக்கைகளை உடனே சரிசெய்ய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உட்பட சுமார் 75 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...