கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி தலைவர் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கோவில்பாளையம் ஶ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் திமுக சிறுபான்மை அணி தலைவர் ஆரோக்கிய ஜான் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இது 40/40 கழக வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடத்தப்பட்டது.


கோவை: கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கோவில்பாளையம் 6வது வார்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பட்டத்தரசி அம்மன் திருக்கோயில் திருவிழா கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்தது.



இந்த திருவிழாவின் போது, கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் கடந்த 8 தினங்களாக இரவு நேர உணவு வழங்கியதுடன், இன்று மதிய உணவு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்வு குறித்து ஆரோக்கிய ஜான் பேசுகையில், "மதங்களை கடந்து மனிதனை நேசிப்போம் என்ற பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் சமூகநீதி பாதையில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் இந்திய பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னதானம் வழங்கப்பட்டது," என்றார்.

மேலும் அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீடுழி நலமுடன் வாழ்ந்து இனி வரும் காலங்களில் தொடர் வெற்றி பெற வேண்டும் என்றும், தமிழகத்தின் 40/40 கழக வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கழக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீண்ட நாட்களாக நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்றும் வேண்டுகிறோம்," என்று தெரிவித்தார்.

"40 கோவில்களில் அன்னதானம் வழங்கி வருகின்றோம். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் வழங்க திட்டமிட்டு இருக்கின்றோம்," என்றும் ஆரோக்கிய ஜான் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி நாகராஜ், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பையன், கவுன்சிலர் வேலுமணி மூர்த்தி, 5 வந்து வார்டு துணை செயலாளர் சுந்திரராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...