பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனைச் சாவடியில் வன குற்றங்களைத் தடுக்க மோப்ப நாய் மூலம் தீவிர சோதனை

பொள்ளாச்சி அருகே ஆழியார் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் பைரவா என்ற மோப்ப நாய் மூலம் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டனர். வன குற்றங்களைத் தடுக்கவும், வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் சோதனைச் சாவடியில் வன குற்றங்களைத் தடுக்கவும், வனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனத்துறையினர் மோப்ப நாய் மூலம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞான பாலமுருகன் தலைமையில், வனத்துறை துணை இயக்குனர் பார்கவ தேஜா உத்தரவின் பேரில் ஆழியார் சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. வனத்துறையினர் பைரவா என்ற மோப்ப நாயின் உதவியுடன் வாகனங்களை சோதனையிட்டனர்.

நேற்று மதியம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், மதுபாட்டில்கள், போதை ஊசிகள் போன்றவை உள்ளனவா என தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...