திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள், அட்டைப்பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.



திருநாவுக்கரசு மற்றும் ஜெகதீஷ் என்ற இரு நண்பர்கள் கலைவாணி தியேட்டர் அருகில் மூன்று மாடி கட்டிடத்தில் பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இரண்டாவது மாடியில் இயங்கும் இந்த நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். முதல் மற்றும் மூன்றாவது தளத்தில் செந்தில் என்பவர் மற்றொரு பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இன்று காலை முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் அட்டைப் பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது. இதனைக் கண்ட ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

தீயை அணைக்க முயன்ற ஊழியர்களால் முடியவில்லை. உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.



இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள், அட்டைப்பெட்டிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...