திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய மூவர் கைது: 60 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 60 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6.4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் வாய்க்கால் மேடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 60 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6.4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (30) என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து, வெள்ளகோவில் போலீசார் மனோஜின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் 60 லிட்டர் சாராய ஊரல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக 6.4 லிட்டர் சாராயம் காய்ச்சி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் மனோஜுடன் சேர்ந்து அவரது நண்பர்களான செல்வராஜ் (53) மற்றும் குட்டி முருகன் (44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட 60 லிட்டர் சாராய ஊரலை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.

காவல் நிலையத்திற்கு அருகாமையிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளகோவில் போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...