கோவையில் அரசு மானியத்துடன் தீவன வளர்ப்புத் திட்டம் - விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் தீவன வளர்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 525 ஏக்கர் நிலத்தில் பசுந்தீவனப் பயிர் வளர்ப்பதற்கு ஏக்கருக்கு ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கால்நடைகளின் உற்பத்தித் திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் என்று குறிப்பிட்டுள்ளார். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு கறவை மாடுகளுக்குத் தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தீவனப் பற்றாக்குறை மற்றும் தீவன விரயத்தை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த 11 ஆண்டுகளாக தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கூடிய தீவன வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.


இந்தத் திட்டத்தில் தோப்புகள், பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனப் பயிர் வளர்ப்பது தொடர்பாக கோவை மாவட்டத்துக்கு நடப்பாண்டில் 525 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.3,000 வழங்கப்பட உள்ளது.


இத்திட்டத்தில் கால்நடைகள் உள்ள தோப்புகள், பழத்தோட்டம் (குறைந்தபட்சம் 0.5 ஏக்கர், அதிகபட்சம் 25 ஏக்கர்) வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள் பல்லாண்டு தீவனப் பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்ய விரும்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக இத்திட்டத்தினை செயல்படுத்திட விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.


இத்திட்டத்தில் இனம் வாரியாக 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...