சரவணம்பட்டியில் போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

கோவை சரவணம்பட்டியில் போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை சரவணம்பட்டி தச்சன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (56) மற்றும் அவரது மனைவி குணசுந்தரி (54) ஆகியோர் போக்கியத்துக்கு வீடு தேடி வந்தனர். அப்போது, கோவை தெற்கு அருணாசலம் காலனியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சரவணம்பட்டி மஹா நகரில் உள்ள வீட்டை போக்கியத்துக்கு விடுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, குணசுந்தரி ஏப்ரல் 24-ஆம் தேதி ராஜசேகரிடம் ரூ.10 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர் வீட்டை ஒப்படைக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக குணசுந்தரி ஜூலை 4-ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...