கோவையில் சி.ஏ. மாணவர்களுக்கான தேசிய மாநாடு: 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் சார்பில் இரண்டு நாள் சி.ஏ. மாணவர்கள் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் (ICAI) சார்பில் சி.ஏ. மாணவர்களுக்கான தேசிய மாநாடு இரண்டு நாட்கள் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.



இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சி.ஏ. படிக்கும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முதல் நாளில் தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆப் இந்தியா மற்றும் போர்ட் ஆஃப் ஸ்டடிஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் பிராந்திய கவுன்சில் கோவை கிளை (SIRC) மற்றும் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் மாணவர்கள் சங்கம் கோவை கிளையால் (SICASA) நடத்தப்பட்டது. கருத்தரங்கில் வருமான வரிச் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த கலந்துரையாடல், சி.ஏ. படிப்பிற்கான ஆர்வத்தை தூண்டும் வகையிலான சொற்பொழிவுகள், ஜிஎஸ்டி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) குறித்த கலந்துரையாடல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.



ICAI முன்னாள் தலைவர் சி.ஏ. ராமசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். சி.ஏ. ஆர்.கேசவன், முன்னாள் இயக்குநர்-நிதி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

மாநாட்டில் சி.ஏ. K.ஸ்ரீப்ரியா குமார் (மத்திய கவுன்சில் உறுப்பினர்), கோவை ICAI கிளையின் தலைவர் விஷ்ணு ஆதித்தன், SICASA கோவை கிளை தலைவர் சி.ஏ. தங்கவேல் M, ICAI கோவை கிளையின் செயலாளர் சி.ஏ. சர்வஜித் எஸ்.கிருஷ்ணன் மற்றும் பல தொழில்துறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...