பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் மூடல்: 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதை எதிர்த்து, நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி நகர மையப்பகுதியில் அமைந்துள்ள வடுகபாளையத்தில் 123 எண் கொண்ட லெவல் கிராசிங் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதை தடுக்க கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

இந்த ரயில்வே கேட், பொள்ளாச்சி மற்றும் கோவை சாலையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரயில்வே துறையினர் இந்த கேட்டை நிரந்தரமாக மூட முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் அப்போது பொதுமக்கள் தொடர்ந்து ஆட்சியர் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் இப்பகுதியில் உள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், ரயில்வே கேட் நிரந்தரமாக மூடுவதை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், திடீரென நேற்று இந்த ரயில்வே கிராஸ் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்குண்டான பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சார்ந்த நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

செய்தியாளரிடம் பேசிய உமா மகேஸ்வரி, "வடுகபாளையம் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில்வே கேட் பொள்ளாச்சி மற்றும் கோவை செல்வதற்கு பதினாறு கிராமங்களுக்கு வழித்தடமாக இருக்கிறது. இதனால் அன்றாட பணிக்கும் ரேஷன் கடை, மருத்துவமனை, பள்ளிக்கு செல்வதற்கு 6 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. மாற்றுப்பாதை பயன்படுத்த ஏதுவாகவில்லை," என்று கூறினார்.

மேலும் அவர், "சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறோம். உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...