கோவையில் தொலைந்த, திருடுபோன 168 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாநகர காவல் அலுவலகத்தில் தொலைந்த மற்றும் திருடப்பட்ட 168 கைப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


Coimbatore: கோவை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தற்போதுவரை 168 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஜூலை 6 அன்று கோவை மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், உரியவர்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், "கோவை மாநகரில் தொலைந்த மற்றும் திருடுபோன 168 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த கைப்பேசிகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு பேசி நேரிலும், கூரியர் மூலமும் போலீஸார் கைப்பேசிகளை மீட்டுள்ளனர். இன்னும் 200 கைப்பேசிகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. கைப்பேசி பறிப்பு தொடர்பாக நடப்பாண்டில் தற்போதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று கூறினார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...