கோவை மாநகரில் மழை: தண்ணீர் தேக்கமின்றி இயல்பு வாழ்க்கை - உக்கடம் பெரிய குளத்தில் குப்பை அகற்றும் பணி தீவிரம்

கோவையில் மிதமான மழை பெய்தும், நகராட்சி ஆணையரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தண்ணீர் தேக்கமின்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. உக்கடம் பெரிய குளத்தில் குப்பை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.


கோவை: கோவை மாநகரில் உக்கடம், சுங்கம், ராமநாதபுரம், காந்திபுரம், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், செல்வபுரம், டவுன் ஹால், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் மிதமான மழை பொழிந்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நிலையில், விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயணம் தடையின்றி நடைபெற்று வருகிறது. வழக்கமாக மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்களில் மழை நீர் தேங்கும் நிலை இருந்தபோதிலும், மாநகராட்சி ஆணையர் M சிவகுருபிரபாகரன் அவர்களின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இம்முறை அத்தகைய நிலை ஏற்படவில்லை.



மழை நீர் வடிகால் பணிகள் தண்ணீர் தேங்கும் இடங்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, மழை நீர் தேங்காமல் வடிந்தோடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மறுபுறம், கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து சென்றனர். இதனால் தின்பண்ட கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அங்கங்கே வீசப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் ஸ்மார்ட் சிட்டி பணியாளர்கள் கிளம்பர் தனியாங்கி எனப்படும் நவீன கழிவு அகற்றும் வாகனம் மூலம் குப்பைகளை அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் உக்கடம் பெரியகுளம் பகுதி விரைவில் தூய்மையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...