கோவை மாநகரில் மழை: தண்ணீர் தேக்கமின்றி இயல்பு வாழ்க்கை - உக்கடம் பெரிய குளத்தில் குப்பை அகற்றும் பணி தீவிரம்

கோவையில் மிதமான மழை பெய்தும், நகராட்சி ஆணையரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தண்ணீர் தேக்கமின்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. உக்கடம் பெரிய குளத்தில் குப்பை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.


கோவை: கோவை மாநகரில் உக்கடம், சுங்கம், ராமநாதபுரம், காந்திபுரம், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், செல்வபுரம், டவுன் ஹால், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் மிதமான மழை பொழிந்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நிலையில், விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயணம் தடையின்றி நடைபெற்று வருகிறது. வழக்கமாக மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்களில் மழை நீர் தேங்கும் நிலை இருந்தபோதிலும், மாநகராட்சி ஆணையர் M சிவகுருபிரபாகரன் அவர்களின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இம்முறை அத்தகைய நிலை ஏற்படவில்லை.



மழை நீர் வடிகால் பணிகள் தண்ணீர் தேங்கும் இடங்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, மழை நீர் தேங்காமல் வடிந்தோடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மறுபுறம், கோவை உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து சென்றனர். இதனால் தின்பண்ட கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அங்கங்கே வீசப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் ஸ்மார்ட் சிட்டி பணியாளர்கள் கிளம்பர் தனியாங்கி எனப்படும் நவீன கழிவு அகற்றும் வாகனம் மூலம் குப்பைகளை அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் உக்கடம் பெரியகுளம் பகுதி விரைவில் தூய்மையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...