கோவை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற மளிகைக் கடை உரிமையாளர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குணசேகரன் என்ற மளிகைக் கடை உரிமையாளர் தீக்குளிக்க முயன்றார். மகள் காதல் திருமணம் செய்து பணம், நகைகளை எடுத்துச் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இச்சம்பவம் நடந்தது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் லோகநாதபுரம் முதலியார் வீதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகளும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் மகனும் உள்ளனர். புவனேஸ்வரி கோவையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த மாதம் 7ஆம் தேதி சுற்றுலா செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து வெளியேறிய புவனேஸ்வரி, 18ஆம் தேதி நவீன் குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும், வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 4 பவுன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், குணசேகரன் தனது மனைவி மற்றும் மகனுடன் ஜூலை 8 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தார். அப்போது, அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் குணசேகரன் கூறுகையில், "எனது மகள் எடுத்துச் சென்ற 5 லட்சம் ரூபாய், 4 பவுன் தங்க நகை மற்றும் கடை விற்பனை மூலம் வங்கிக்குச் சென்ற G-pay தொகை ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை மீட்டுத் தரும்படி மனு அளித்துள்ளேன்" என்றார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...