பொள்ளாச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூவர் கைது

பொள்ளாச்சியில் மூன்று வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை ஜூலை 7 அன்று மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்றது.

முதல் சம்பவத்தில், பொள்ளாச்சி நல்லூர் வனப்பகுதி சோதனை சாவடி அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக சேலம் மேச்சேரியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 46) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 37 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டாவது சம்பவத்தில், பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் லாட்டரி டிக்கெட் விற்றதாக பொள்ளாச்சி சின்னம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (வயது 72) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 24 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரூ. 200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மூன்றாவது சம்பவத்தில், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். இதில், பொள்ளாச்சி பழனியப்பா லே-அவுட்டைச் சேர்ந்த பேச்சுமுத்து (வயது 65) கைது செய்யப்பட்டார்.

இந்த மூன்று சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...