உடுமலை அருகே சாலை அமைப்பதில் முறைகேடு: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு. கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சாலை அமைக்க 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுகவைச் சேர்ந்த போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் முறைகேடாக அருகில் உள்ள தனியார் மனைப்பிரிவுக்கு நிதியை ஒதுக்கி சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் புகார் அளித்தனர். தவறு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட அதிகாரிகள் சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, சாலை அமைப்பதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பொதுமக்கள் கூறுகையில், "கடந்த இரண்டு வருடமாக சாலை அமைப்பதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இனியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்," என்றனர்.

உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் உடுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...