கோவையில் காவல் உதவி ஆய்வாளர் என கூறி பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது

கோவை பேரூரில் காவல் உதவி ஆய்வாளராக நடித்து பெட்டிக்கடையில் ரூ.15,000 பறித்த முன்னாள் போலீஸ் அதிகாரியும், பாஜக நிர்வாகியுமான நபர் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவை பேரூர் படித்துறை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் உள்ள ஒரு பெட்டி கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த பண பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளி தன்னை பேரூர் உதவி ஆய்வாளர் என கூறி, பெட்டிக்கடை உரிமையாளர் வெற்றிவேலிடம் இருந்து ரூ.15,000 பறித்துக் கொண்டதோடு, அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி உக்கடம் காவல் நிலையம் பின்புறம் கொண்டு சென்று விட்டு விட்டு தப்பியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து வெற்றிவேல் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பேரூர் அருகே வசித்த பெருமாள் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், பெருமாள் 1997 பேஜை சேர்ந்த முன்னாள் தமிழக காவல்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. அவர் 2010-ல் போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போது சீட்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், கைது செய்யப்பட்ட பெருமாள் பாஜக மாநகர் மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவில் துணைத் தலைவராக இருந்தவர் என்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட பெருமாளிடம் காவல்துறையினர் ஜூலை 10 அன்று மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...