கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிகரிக்க நடவடிக்கை

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை அதிகரிக்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது தொழில்துறையினர் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளை விரைவில் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல் தொழில் துறையினர் மற்றும் விமான பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கு குளோபல் போரம் அமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்துள்ளது வரவேற்கத்தக்கது. விரைவில் நிலங்கள் ஏஏஐ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன," என்றார்.

சமீபத்தில் கோவையில் விமான நிறுவன அதிகாரிகளுடன் சிஐஐ சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. ஸ்கூட் நிறுவனம் சிங்கப்பூருக்கு வாரத்தில் எட்டு சேவைகள் வழங்க வேண்டும் என்றும், 236 பேர் அமரக்கூடிய ஏ 321 ரக விமானங்களை அதிகம் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இண்டிகோ நிறுவனம் தற்போது 20 உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. கோவை-புனே இடையேயான இரவு சேவையை காலை நேரத்திற்கு மாற்றவும், கோவை-கோவா இடையேயான காலை 7 மணி சேவையை மதியம் 12 மணிக்கு மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், கோவை-பெங்களூரு, கோவை-திருவனந்தபுரம், கோவை-மங்களூரு இடையே சிறிய ரக விமான சேவைகளைத் தொடங்கவும் வலியுறுத்தப்பட்டது.

கோவையில் இருந்து சிங்கப்பூர், இலங்கை மற்றும் அபுதாபிக்கு விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏர்இந்தியா தற்போது டெல்லி-கோவை-டெல்லி இடையே இரண்டு சேவைகளை வழங்கி வருகிறது. விஸ்தாரா ஒரு விமான சேவையை வழங்குகிறது, மேலும் விரைவில் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கோவை-டெல்லி இடையே காலை விமான சேவை வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் டெல்லியில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஏர் இந்தியா சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விமான நிறுவன அதிகாரிகள், கோவை தங்களுக்கு வணிக ரீதியாக சிறந்த விமான நிலையமாக திகழ்வதாகவும், விரைவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானசேவை அதிகரிக்கவும், சரக்கு கையாளுதலை விரிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இத்தகவல்கள் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கொங்கு குளோபல் போரம் இயக்குநர் சதீஷ் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...