ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குடமுழுக்கு விழா தை மாதத்திற்குள் நடைபெறும்: பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா தை மாதத்திற்குள் நடைபெறும் என்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோயில் ராஜகோபுரத்தில் பாலாலய பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் தை மாதத்திற்குள் நடைபெறும் என்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோயில் ராஜகோபுரத்தில் பாலாலய பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

தமிழக முதலமைச்சர் சட்டசபையில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று கோயிலின் ராஜகோபுரம் முன் பகுதியில் பாலாலய பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி, "தமிழகத்தில் இதுவரை 5000-க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா தமிழக முதலமைச்சரால் நடத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உலகப் புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்தப் பணிகள் இன்று துவங்கியுள்ளன. வரும் தை மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும்," என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைவாணி சாந்தலிங்கம், ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, யுவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....