பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் 26 கட்டிடங்களுக்கு சீல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அரசு விதிகளை மீறிய 26 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அரசு விதிகளை மீறிய 26 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டது.

மகாலிங்கபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் வணிக கட்டிடங்களும் உள்ளன. இவற்றில் பல கட்டிடங்கள் வணிக பயன்பாட்டு அனுமதி பெறாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று கடைகளுக்கு சீல் வைக்க வந்த நகராட்சி பொறுப்பு ஆணையாளர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகளை மகாலிங்கபுரம் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

பின்னர் அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மொத்தம் 66 கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் 40 கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளனர். எனவே மீதமுள்ள 26 கடைகளுக்கு மட்டுமே நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...