காங்கேயம் காடையூர் காடையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூரில் உள்ள காடையீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூரில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீ கருணாகர பெருமாள் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இந்த கோவிலில் ஸ்ரீ விநாயகர் முதல் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வரை பரிவாரங்களுடன் கூடிய ஸ்ரீ பங்கசாட்சி உடனமர் ஸ்ரீ காடேஸ்வரப் பெருமான், காக்கும் கடவுளாக விளங்கும் ஸ்ரீ கருணாகர பெருமாள், ஸ்ரீ வெள்ளையம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.



கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. புனித நீர் கலசங்களுக்கும் சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிம்ம லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஆன்மிகவாதிகள், பக்தர்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். அனைவரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை, ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமாளின் அருளைப் பெற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோவில் விழா கமிட்டியின் மூலம் உணவு வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன், காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...