பம்ப்செட் ஜிஎஸ்டி வரியை 18 லிருந்து 12 சதவீதமாக குறைக்க கோரிக்கை: தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம்

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 71வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், வரும் மத்திய பட்ஜெட்டில் பம்ப்செட் ஜிஎஸ்டி வரியை 18 லிருந்து 12 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.


Coimbatore: தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 71வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை பந்தய சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக மிதுன் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில், பம்ப்செட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான கோரிக்கைகளை வரும் ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எடுத்துரைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக, வரும் மத்திய பட்ஜெட்டில் பம்ப்செட்டுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் புதிய தலைவர் மிதுன் ராமதாஸ், "பம்ப்செட்டுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோருகிறோம். குறிப்பாக, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார்.

இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும், பம்ப்செட் தயாரிப்பு துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...