PICME 3.0 பதிவு முறையை எளிமையாக்க கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை..!

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், PICME 3.0 பதிவு முறையை எளிமையாக்குதல், சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


Coimbatore: கோவை தாமஸ் கிளப் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் சி. பரமேஸ்வரி பேசினார்.

பரமேஸ்வரி கூறுகையில், "புதிதாக உருவாக்கப்பட்டுள்ள PICME 3.0 பதிப்பில் பல சிக்கல்கள் உள்ளன. தற்போதைய முறையில், கர்ப்பிணிகளை பதிவு செய்யும்போது அவர்களின் அலைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்படுகிறது. இது பல ஏழை எளிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, PICME 3.0 பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும்," என்றார்.



மேலும் அவர், "பொது சுகாதாரத் துறையில் ஆண்-பெண் ஊதிய வேறுபாடு நிலவுகிறது. சம ஊதியம் வழங்க கோரி அரசுக்கு கடிதம் அளித்துள்ளோம். 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

கிராம சுகாதார செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தாய் சேய் மரண ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்றும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.



"அரசு தொடர்ந்து பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. எங்கள் துறையையும் உற்று நோக்கி அரசு உதவி செய்ய வேண்டும். இல்லையெனில், நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல நேரிடும்," என பரமேஸ்வரி எச்சரித்தார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...