தாராபுரம் பொன்னிவாடி அங்காளம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அங்காளம்மன் கோயிலில் ஜீரணோத்தாரண பணிகளுக்குப் பின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஜீரணோத்தாரண பணிகளுக்குப் பின் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய ராஜகோபுரம் மற்றும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா இதன் ஒரு பகுதியாக நடைபெற்றது.

விழாவின் முதல் நாளில், மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூரணாகுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இரண்டாம் நாளில், யாகசாலை பூஜை, கோ பூஜை, மஹா பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. பின்னர், கும்பம் மற்றும் கடம் புறப்பாடு ஆலயத்தை வலம் வந்து, ஆலய ஸ்தூபி, கோபுரம், ஆலய மூலஸ்தான தெய்வங்கள் மற்றும் புதிய கோபுரங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.



அங்காளம்மன் தேவர்கள், மனிதர்கள் மற்றும் இவ்வுலகில் வாழும் அனைத்து சீவராசிகளையும் காக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். பொன்னிவாடியில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன், கூடையில் செங்கல் வடிவில் கொண்டுவரப்பட்டு, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அங்காளம்மன் திருவுருவம் செய்யப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது.

இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அங்காளம்மனின் அருளைப் பெற்றனர். இந்த விழா சகல செல்வங்களையும் அளிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...