சிறுவாணி அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்வு: தொடர் மழையால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் 30 அடியாக உயர்ந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடரும் மழையால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.


கோவை: கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் 30 அடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி ஆகும்.

மழை பொய்த்ததால் இந்தாண்டு துவக்கத்தில் 26 அடியாக இருந்த நீர் மட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையால் படிப்படியாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த ஜூலை 8ம் தேதி அடிவாரத்தில் 12 மி.மீ. மற்றும் அணைப்பகுதியில் 55 மி.மீ. மழை பதிவாகி நீர் மட்டம் 28 அடியாக உயர்ந்தது.

நேற்று (ஜூலை 13) காலை 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில் 17 மி.மீ. மழையும், அணைப்பகுதியில் 73 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்தது. தற்போது அணையில் இருந்து 5.88 கோடி லிட்டர் நீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இது கோவை மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...