கோவையில் பட்டியல் இன இளைஞர் கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் 2016ல் நடந்த பட்டியல் இன இளைஞர் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து எஸ்.சி எஸ் டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



Coimbatore: கோவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டியல் இன இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் மற்றும் இருவருக்கு ஆயுள் தண்டணை விதித்து கோவை எஸ்.சி எஸ் டி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சோலைராஜன் என்பவரது மகன் தாமரைச்செல்வன் (23) டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இரவு, சின்ராஜ் நகர் புற்றுகண் மாரியம்மன் கோவில் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தாமரைச்செல்வன், பிரசாந்த், ஜெகதீஷ் ஆகிய மூவரையும் கார்த்திக், மகேந்திரன் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. தாமரைச்செல்வனை கொடூரமாக வெட்டி, கல்லை தலையில் போட்டு கொலை செய்தனர்.



இந்த வழக்கில் கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில், மொத்தம் 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 14 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அதில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜெயசிங் என்பவர் உயிரிழந்த சூழலில், விஜய் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான், டைல் சுரேஷ், பிரகாஷ், நண்டு நவீன், விமல், ஒன்றரை கௌதம், கலைவாணன் ஆகியோர். கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, பின்னர் பலத்த பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குற்றவாளிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...