திருப்பூரில் பூரண மதுவிலக்கு மற்றும் பாதுகாப்பு கோரி முதலமைச்சருக்கு மனு

திருப்பூரில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் பூரண மதுவிலக்கு, கூலிப்படை ஒழிப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் முதலமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று (15.7.2024) ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையினரை என்கவுண்டர் செய்ததற்காக தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவேலை செய்பவர்கள், இந்துத்துவ பணி செய்பவர்கள், மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு எதிராக மனு கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ளார்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...