கோவை: கல்வி நிறுவனங்களில் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றச்சாட்டு

கோவையில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டி, புகார் கமிட்டி அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சுதா, மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளித்துள்ளார். மனுவில், "கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பிரச்சனைகள் குறித்து கூறினாலும், பெற்றோர்கள் தங்களது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் பள்ளிகள் தங்களது நற்பெயர் கெட்டுவிடும் என்றும் இது போன்ற பிரச்சனைகளை மறைத்து விடுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஓராண்டிற்கு முன் ஆலாந்துறை அரசு பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம், சின்மயா பள்ளி மாணவியின் பாலியல் வழக்கு, மற்றும் சமீபத்தில் வடவள்ளி ஓணப்பாளையம் பகுதியில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இவை ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் POCSO சட்டம் சார்ந்த விழிப்புணர்வின்மையை காட்டுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகளின் எதிர்கால நலன் கருதி, கோவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உடனடியாக உள் புகார் கமிட்டி (ICC கமிட்டி) அரசின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட வேண்டும் என்றும், இவ்வனைத்து புகார் கமிட்டிகளையும் மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான புகார் கமிட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...