கோவை: கல்வி நிறுவனங்களில் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றச்சாட்டு

கோவையில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டி, புகார் கமிட்டி அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சுதா, மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளித்துள்ளார். மனுவில், "கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பிரச்சனைகள் குறித்து கூறினாலும், பெற்றோர்கள் தங்களது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் பள்ளிகள் தங்களது நற்பெயர் கெட்டுவிடும் என்றும் இது போன்ற பிரச்சனைகளை மறைத்து விடுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஓராண்டிற்கு முன் ஆலாந்துறை அரசு பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம், சின்மயா பள்ளி மாணவியின் பாலியல் வழக்கு, மற்றும் சமீபத்தில் வடவள்ளி ஓணப்பாளையம் பகுதியில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இவை ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் POCSO சட்டம் சார்ந்த விழிப்புணர்வின்மையை காட்டுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகளின் எதிர்கால நலன் கருதி, கோவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உடனடியாக உள் புகார் கமிட்டி (ICC கமிட்டி) அரசின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட வேண்டும் என்றும், இவ்வனைத்து புகார் கமிட்டிகளையும் மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான புகார் கமிட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...