கோவையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்

கோவையில் பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கொடியேற்றம், இனிப்பு வழங்குதல், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.


கோவை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஜி வி நவீன் குமார் தலைமையில் கோவையில் பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



குரும்ப்பாளையத்தில் ஓ பி சி மாநில பொதுச் செயலாளர் எஸ் எஸ் குளம் நாகராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சரவணம்பட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் சரவணம்பட்டி ரகுராமன் முன்னிலையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. சரவணம்பட்டி பெரியார் நகரில் மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.



விளாங்குறிச்சி காமராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளவை கோபால் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு, காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



விளாங்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



சேரன்மா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 10,000 மற்றும் ரூபாய் 5,000 நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.



அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.



வலியாம்பாளையம் மற்றும் சரவணம்பட்டி அரசு பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் சுந்தரசாமி, சின்னச்சாமி, சண்முகசுந்தரம், ரங்கசாமி, ரங்கநாதன், பாலு, முருகானந்தம், சுரேஷ், கார்த்திக், முரளி கிருஷ்ணன், விவேகானந்தன், கலைச்செல்வன், காசி, ராமலிங்கம், மாணிக்கம், பொன்னுச்சாமி, வேலுச்சாமி, ரவிக்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...