கோவையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்

கோவையில் பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கொடியேற்றம், இனிப்பு வழங்குதல், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.


கோவை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஜி வி நவீன் குமார் தலைமையில் கோவையில் பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



குரும்ப்பாளையத்தில் ஓ பி சி மாநில பொதுச் செயலாளர் எஸ் எஸ் குளம் நாகராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சரவணம்பட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் சரவணம்பட்டி ரகுராமன் முன்னிலையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. சரவணம்பட்டி பெரியார் நகரில் மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.



விளாங்குறிச்சி காமராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளவை கோபால் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு, காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



விளாங்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



சேரன்மா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 10,000 மற்றும் ரூபாய் 5,000 நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.



அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.



வலியாம்பாளையம் மற்றும் சரவணம்பட்டி அரசு பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் சுந்தரசாமி, சின்னச்சாமி, சண்முகசுந்தரம், ரங்கசாமி, ரங்கநாதன், பாலு, முருகானந்தம், சுரேஷ், கார்த்திக், முரளி கிருஷ்ணன், விவேகானந்தன், கலைச்செல்வன், காசி, ராமலிங்கம், மாணிக்கம், பொன்னுச்சாமி, வேலுச்சாமி, ரவிக்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...