பொள்ளாச்சியில் சிற்பி இலக்கிய விருது விழா: பல எழுத்தாளர்களுக்கு கௌரவம்

பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது விழா நடைபெற்றது. பல்வேறு எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிற்பி பாலசுப்ரமணியத்தின் இரு நூல்கள் வெளியிடப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது விழா 16-07-2024 அன்று நடைபெற்றது. என்.ஜி.எம் கல்லூரியின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவுக்கு தலைமை தாங்கினார்.

விழாவில், பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. முனைவர் க.பஞ்சாங்கம் இந்த நூல்களை வெளியிட்டு அறிமுக உரையாற்றினார். முனைவர் கி.பார்த்திபராஜா நூல்களைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். "நறிவிலி" எனும் கவிதைத் தொகுப்பும், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதைகளின் மொழிபெயர்ப்பான "உழவனின் பாடல்" ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டன.



2023ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுகள் கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி மற்றும் கவிஞர் கோ.வசந்தகுமாரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஓவியக் கவிஞர் அமுதபாரதி மற்றும் கவிஞர் நா.வே.அருள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. அதே ஆண்டுக்கான சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது. மேலும், பதிப்பியல் வித்தகர் எனும் விருது மணிவாசகர் பதிப்பகத்தைச் சார்ந்த இராம.குருமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது.



விருதாளர்கள் குறித்த அறிமுக உரையை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த கவிஞர் க.அம்சப்ரியாவும் கவிஞர் இரா.பூபாலனும் வழங்கினர். கவிஞர் நந்தலாலா விருதுபெற்றவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். கிருங்கை சேதுபதி நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் வடிவேல் மற்றும் பேராசிரியர் சேதுபதி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.



நாஞ்சில்நாடன், சுப்ரபாரதிமணியன், விஜயா மு.வேலாயுதம் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், இலக்கிய அமைப்பினர் என திரளானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். சிற்பி அறக்கட்டளை, என்.ஜி.எம் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...