விளாங்குறிச்சி ரோடு ஏறுதளம் பிரச்சினை: முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக்கிடம் மனு

கோவை விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிப்பு. இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக்கிடம் மனு அளிக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணி தொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று கோவை மாநகர மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் நா கார்த்திக் முன்னாள் எம்எல்ஏவை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது தொடர்பான மனுவை அளித்தனர். இந்த சந்திப்பில் மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மறுமலர்ச்சி திமுக மாநகர மாவட்ட துணை செயலாளர் பயணியர் தியாகு, பீளமேடு பகுதி கழக செயலாளர் எஸ் பி வெள்ளியங்கிரி, திராவிட முன்னேற்றக் கழக பீளமேடு பகுதி கழக செயலாளர் துரைசெந்தமிழ்ச்செல்வன், 26 வது வார்டு வட்டக் கழக செயலாளர் ஆ மாடசாமி, மாவட்ட பிரதிநிதி பூவே துரைசாமி, வட்டக் கழகப் பிரதிநிதி சதீஷ் கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, விளாங்குறிச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Hindu Munnani functionary arrested for slandering Prophet Muhammad in Coimbatore - Simplicity https://simplicity.in/coimbatore/english/news/77769/

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...