அன்னூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை கண்காணிப்பு தீவிரம்

கோவை அன்னூர் அருகே பொன்னேகவுன்டன் புதூரில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Coimbatore: கோவை அன்னூர் அருகே உள்ள பொன்னேகவுன்டன் புதூரில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


பொன்னேகவுன்டன் புதூரில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் ஜூலை 17ஆம் தேதி காலை மின் வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ​​ஒரு மறைவான புதருக்குள் மயில் ஒன்று முட்டையிட்டு அடைகாத்து வந்தது. அதனை ஒரு சிறுத்தை வேட்டையாட முயன்றதை கண்டு மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


அச்சமடைந்த ஊழியர்கள் சத்தம் எழுப்பியதும், சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர், நடந்த சம்பவத்தை தோட்ட உரிமையாளரிடம் தெரிவித்தனர். தோட்ட உரிமையாளர் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.


இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும், அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, தானியங்கி கேமராக்களை பொறுத்தியுள்ளனர். பொன்னேகவுன்டன் புதூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்டுள்ள வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கிராம மக்கள் இரவு நேரங்களில் தேவையின்றி தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...