கோவையில் பல்வேறு குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் இறந்த பல்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். மூத்த கட்சி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்வியாளர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்.எல்.ஏ., இன்று (ஜூலை 17) பல்வேறு குடும்பங்களுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.



முதலில், கோவை மாநகர் மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் மோசஸின் தாயார் சந்திரா அவர்களின் மறைவையொட்டி, கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நா.கார்த்திக் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இந்த நிகழ்வில் 81-வது வட்டக் கழகச் செயலாளர் டவுன் பா.ஆனந்த் உடனிருந்தார்.



அடுத்ததாக, கோவை மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் எம்.எஸ்.எம்.தங்கவேல் தாயார் சுந்தராம்பாள் அவர்களின் மறைவையொட்டி, நல்லாம்பாளையம் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், கணபதி பகுதி திமுக செயலாளர் கணபதி லோகு, சி.எஸ்.முருகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.



தொடர்ந்து, கோவை பிரபு இண்டஸ்ட்ரீஸ் அரவிந்த் அவர்களின் மனைவி கிருத்திகா அவர்களின் மறைவையொட்டி, நவ இந்தியா அருகில் உள்ள அவரது இல்லத்திற்கு நா.கார்த்திக் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.



இறுதியாக, கோவை நேஷனல் மாடல் பள்ளிக் குழுமங்களின் தாளாளர் ப. மோகன் சந்தர் அவர்களின் தாயார் ப.சாந்தாமணி அவர்களின் மறைவையொட்டி, கல்லூரி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன் உடனிருந்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...