அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர், மறையூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது அமராவதி அணைக்கு வினாடிக்கு 6,344 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி ஆகும். தற்போதைய நீர்மட்டம் 84.30 அடியாக உள்ளது. அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணையில் இருந்து எந்நேரமும் உபரி நீர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்லாபுரம், ரூத்ரா பாளையம், கொழூமம், மடத்துக்குளம், காரத்தொழுவு உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...