சூலூர் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு: சிகிச்சை பலனின்றி மற்றொருவர் பலி

கோவை மாவட்டம் சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி மற்றொருவர் உயிரிழந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த அழகர்ராஜா (24), முத்துக்குமார் (23), கருப்புசாமி (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நான்கு பேரில், தினேஷ்குமார் (23), மனோஜ் (24), பாண்டீஸ்வரன் (27) மற்றும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வீரமணி (21) ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரமணி ஜூலை 16 அன்று உயிரிழந்தார். இதன் மூலம் சூலூர் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சோகமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...