சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.


கோவை: கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் போலீசார் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். பின்பு இருவருக்கும் சைபர் கிரைம் போலீசாரின் குற்றப்பத்திரிக்கை நகல் நீதிபதி முன்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு இருவரும் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பு வழக்கறிஞர் கென்னடி செய்தியாளர்களிடம் பேசினார்.



அவர் கூறுகையில், "இந்த வழக்கில் ஒரே குற்றத்திற்கு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது சட்டத்திற்கு முரணானது. காவல்துறை அரசியலமைப்பை மீறி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து வழக்குகள் தாக்கல் செய்யக்கூடாது. ஆனால் அதை மீறி நடந்துள்ளது," என்றார்.

மேலும் அவர், "தமிழ்நாடு ஒரு போலீஸ் மாநிலமாக மாறி வருகிறது. அவசரமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதே போல அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும். 200 முதல் 300 போலீசார் வந்துள்ளனர், மக்களின் பணத்தை வீணாக செலவழிக்கின்றனர்," என்று குற்றம் சாட்டினார்.

"பல்வேறு கட்சியினர் அவதூறாக பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சீமான் கூட கொச்சையாக பேசியிருக்கிறார், அதைப் பற்றி காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை," என்றும் வழக்கறிஞர் கென்னடி தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...