கோவை: வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த நபர் கைது

கோவை கரடிமடை அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த ராமசாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் இந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டம் கரடிமடை அருகே உள்ள வெள்ளி மேடு பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டுப் பன்றி மற்றும் முயல் வேட்டைக்காக வைக்கப்படும் 'அவுட்க்காய்' எனப்படும் நாட்டு வெடியால் கால்நடைகள், யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் பலத்த காயமடைவதுடன், சில சமயங்களில் உயிரிழப்பதும் உண்டு. இதனைத் தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



மதுக்கரை வனச்சரகம் உட்பட்ட கரடிமடை பிரிவு பூலுவபட்டி கிராமம் அடுத்த வெள்ளி மேடு பகுதியில் வசிக்கும் ராமசாமி என்ற கருஞ்சி என்பவர் வீட்டில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படும் நாட்டு வெடி குண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

பூலுவப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோமதியின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் ராமசாமியின் வீட்டில் இரண்டு நாட்டு வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், இது குறித்து ஆலந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வெடி பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ராமசாமியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...