கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரப்பட்டது.


கோவை: கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளைக் கண்டித்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது.





31.10.2023 அன்று பொதுமக்கள் பயன்படுத்தும் புல எண் 37/3ல் உள்ள நத்தம் காலியிடத்தில் கற்கள் இட்டும், சுவர் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி (W.P.No. 28218/2021) காவல்துறை பாதுகாப்புடன் அகற்றி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், ஆக்கிரமிப்பு அளந்து எல்லைக்கல் இடப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால், ஆக்கிரமிப்பு செய்த நபர் அந்த காலியிடம் தனக்கு சொந்தமானது என கூறி, பொதுமக்கள் பயன்படுத்தினால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தல் செய்து பேனர் வைத்துள்ளார். இது பொதுப்பாதையை பயன்படுத்தும் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது.

05.07.2024 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆக்கிரமிப்பை முழுமையாக விரைவில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருக்குமரன் நகர், விஐபி நகர், மற்றும் சீனிவாசா நகர் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இன்றி பயன்படும் வகையில், சரியான முறையில் அளந்து எல்லைக்கல் இட்டு ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...