கோவையில் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மதிமுக இளைஞரணி மனு

கோவை மாநகர போக்குவரத்து ஆணையரிடம் மதிமுக இளைஞரணியினர் தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மனு அளித்தனர். நகரப் பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகர போக்குவரத்து ஆணையரை இன்று (ஜூலை 18) சந்தித்த மதிமுக இளைஞரணியினர், தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகர் பகுதிகளில் தனியார் பேருந்துகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நேரங்களில் (Peak Hours) மாநகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலையும் மீறி இவ்வாறு பேருந்துகள் இயக்கப்படுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகளின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் மதிமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் இராஜீவ் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...