கோவை அரசு மருத்துவமனையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பெற்ற 278 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. குழந்தைகளின் செவித்திறன், பேச்சுத்திறன் ஆராயப்பட்டு, பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பத்து வருடங்களுக்கு மேலாக செய்யப்பட்டு வருகிறது.



இதுவரை 278 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை இங்கு செய்யப்பட்டுள்ளது.



இதன் தொடர்ச்சியாக இன்று ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அவர்களுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் மேன்பட்டு இருக்கிறதா என்று ஆராயப்பட்டு அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது.



மேலும் அந்த கருவியை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு செய் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.



இந்த பயிற்சி முகாமை மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் டாக்டர் A. நிர்மலா அவர்கள் தொடங்கி வைத்து அக்குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். மேலும் இந்த முகாமில் காது மூக்கு தொண்டை துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் செவித்திறன் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...