கோவை அரசு மருத்துவமனையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பெற்ற 278 குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. குழந்தைகளின் செவித்திறன், பேச்சுத்திறன் ஆராயப்பட்டு, பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை பத்து வருடங்களுக்கு மேலாக செய்யப்பட்டு வருகிறது.



இதுவரை 278 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை இங்கு செய்யப்பட்டுள்ளது.



இதன் தொடர்ச்சியாக இன்று ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அவர்களுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் மேன்பட்டு இருக்கிறதா என்று ஆராயப்பட்டு அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது.



மேலும் அந்த கருவியை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு செய் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.



இந்த பயிற்சி முகாமை மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் டாக்டர் A. நிர்மலா அவர்கள் தொடங்கி வைத்து அக்குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். மேலும் இந்த முகாமில் காது மூக்கு தொண்டை துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் செவித்திறன் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...