வால்பாறையில் புதிய சாலையில் பள்ளம்: போக்குவரத்து நிறுத்தம்

வால்பாறை அருகே புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து, சாலை அமைப்பில் குறைபாடு காரணமாக பள்ளம் உருவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே புதிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி மூலம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் சுமார் 12 கோடி மதிப்பில் 13 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பழைய சாலைக்கு மேல் சிறிது கற்கள் போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.



ஊசிமலை எஸ்டேட் தண்ணி கான் செட் என்ற பகுதியில் சிறிய ஓடை உள்ளது. கடந்த நாட்களில் மழை வராமல் ஓடையில் தண்ணீர் குறைவாக காணப்பட்டது. ஆனால் சில தினங்களாக அதிக கனமழை பெய்ததால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து வழக்கம் போல் ஓடையின் பாதையில் தண்ணீர் சென்றது. தற்போது ஓடையின் மேல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் தடைப்பட்டுள்ளது.

வழக்கமாக சாலை அமைக்கும்போது சாலையின் அடியில் ஓடை இருந்தால் அங்கு பெரிய குழாய் பதித்து பின்பு தான் சாலை அமைப்பது வழக்கம். ஆனால் தற்போது பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் குழாய் வைக்காமல் ஓடைக்கு மேல் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஓடையில் சீராக தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு அப்பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாலை பணி நடைபெறும் போது அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடாமல் இருப்பதுதான் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், ஒப்பந்ததாரர்கள் பணியாளர்கள் அப்பகுதியில் பணி செய்யும் பொழுது அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...