நீட் தேர்வு இல்லாமல் மருத்துவப் படிப்பு: கோவையில் கோடிக்கணக்கில் மோசடி

கோவை சிங்காநல்லூரில் KSG அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற பெயரில் சட்டவிரோத மருத்துவக் கல்லூரி இயங்கி வந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் 60 லட்சம் வரை கட்டணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் KSG அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக மருத்துவக் கல்லூரி இயங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரி மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் வழக்கறிஞருடன் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர்.



இது குறித்து வழக்கறிஞர் ஜான்லி கூறுகையில், "நீட் நுழைவுத் தேர்வு இல்லாமல், மூன்று ஆண்டுகள் கோவையில் மருத்துவ படிப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் மருத்துவ பயிற்சி என்று ஆசை வார்த்தை கூறி, கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏமாற்றியுள்ளனர். கிராமப்புற மாணவர்களை குறிவைத்த இந்த நிறுவனம், மாணவர்களிடம் இருந்து 60 லட்சம் வரை கட்டணமாக வசூலித்துள்ளனர்" என்றார்.

2014 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வந்த இந்த கல்லூரியில் நடந்த மோசடி 2019 ஆம் ஆண்டில்தான் வெளிச்சத்திற்கு வந்தது. 2021 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரிடமும் அவரது மகன் மருத்துவம் படிக்க உதவுவதாக கூறி ஐம்பது லட்சம் ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்த மருத்துவக் கல்லூரி இயங்கி வந்ததாகவும் தெரிகிறது.



கீதா என்பவர் இந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும், சாந்தனு என்பவர் அவருக்கு உதவியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்த்து விடுவதாக கூறிவிட்டு, பின்னர் சந்தேகம் வந்ததும் அமெரிக்க கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு மருத்துவப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி மாணவர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த மோசடியில் மொத்தம் 30 கோடி ரூபாய் வரை கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...