அமராவதி அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து: லக்கம் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. லக்கம் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 88 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான லக்கம் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், மறையூர், காந்தளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.



குறிப்பாக, தமிழக-கேரள எல்லை பகுதியான மறையூரில் உள்ள லக்கம் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இதன் விளைவாக, அமராவதி அணைக்கு தற்போது 7,000 கன அடி நீர்வரத்து உள்ளது.



அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரதான மதகுகள் வழியாக இரண்டாவது நாளாக 1,500 கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



தற்போது, அமராவதி அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியில், நீர்மட்டம் 88 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...