திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளி திருவிளக்கு பூஜை: நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளியன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வழிபட்டனர். சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆவுடைநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுக்ரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில் முன்னதாக, ஆவுடைநாயகி அம்பாள் மற்றும் ஸ்ரீ சுக்ரீஸ்வரசுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

பூஜையில் பங்கேற்றவர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மாங்கல்யம், தேங்காய், வாழைப்பழம், அரிசி கொண்டு பூஜைகள் செய்யப்பட்டது. பெண்கள் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழித்திடவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், சுமங்கலி பெண்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் குத்துவிளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...