கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இதனை தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.


கோவை: கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஜூலை 20 அன்று நடைபெற்றது. இந்த முகாமை கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அவர் பத்திரிகையாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.



ஹிந்துஸ்தான் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சதீஷ் பிரபு ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

இந்த மருத்துவ முகாமில் கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இது போன்ற மருத்துவ முகாம்கள் பத்திரிகையாளர்களின் உடல்நலனை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...