பொள்ளாச்சி அருகே கோழிப் பண்ணை இடிந்து விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையத்தில் கனமழை காரணமாக கோழிப் பண்ணை இடிந்து விழுந்தது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார், மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக கோழிப் பண்ணை இடிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவர் நடத்தி வரும் கோழிப் பண்ணை இடிந்து விழுந்தது.



இந்த கோழிப் பண்ணையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் வேலை செய்து வந்தனர். பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக கோழிப் பண்ணை சரிந்து விழுந்ததில், கோழிப் பண்ணையின் உரிமையாளர் முருகானந்தம் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.



இந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மெமதாசிங் (33) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



படுகாயம் அடைந்த முருகானந்தம் (45), ரேவதி (40), ரவிசிங் (46), கொனாமிகா (20) ஆகிய நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...